சென்னை எழும்பூரில் உள்ள ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டரில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த டாக்டர் அலெக்ஸாண்டர் அவர்கள் கூறியது ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டரில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாகவும் அந்த வகையில் 27/7/2025 அன்று கண் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் வழங்கப்பட்டது இந்த மாபெரும் கண் பரிசோதனை முகாமில் கிராமப்புற மக்களும் பயனடைய வேண்டும் என்பதே ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டர் மூலம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் ஆனால் அதற்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது மிக கடினம் இருந்தாலும் ஒரு சில கிராமங்களுக்கு ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டர் மருத்துவ முகாம் நடைபெற்று வருவதாகவும் அங்கு இருக்க கூடிய மக்களும் சென்னை எழும்பூரில் உள்ள ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டரில் மருத்துவ முகாம் நடைபெறும் போது பரிசோதனை செய்து கொள்ளலாம் அதற்கு தேவையான உதவிகளையும் ஆலோசனைகளையும் இங்கு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இருந்தாலும் பொது மக்களாகிய நாம் நம்முடைய பிரச்சனைகளை நேரில் சென்று அவர்களிடம் ஆலோசனை பெற்று அதற்கு உண்டான தீர்வுகளை நாம் சரி பார்த்துக் கொள்ளவும் கே ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் எப்போதும் ஏழை எளியோருக்கு மருத்துவ ரீதியாக அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார் இந்த மாபெரும் கண் மருத்துவ முகாமில் அப்பகுதியில் உள்ள மக்கள் கண் பரிசோதனை செய்து கொண்டனர் என தெரிவித்தார். இந்த மாபெரும் கண் பரிசோதனை மருத்துவ முகாமில் ஏஜிஎஸ் சுபைதா மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள் என கலந்து கொண்டனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.