March 7, 2026

79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகரிஷி வித்யா மந்திர் மேனிலைப்பள்ளி (SKPD&C) சார்பில் நடைபெற்றது

சென்னை பெரிய மேடு மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி skpd&C சார்பில் 15-08-2025
சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது

மேலும் நாட்டின் உண்மையான சுதந்திரம் மக்கள் மனதில் இருக்கும் ஒற்றுமையில் தான் நாம் அனைவரும் சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகிறோம் அந்த வகையில் நம் பள்ளியில் இன்று 79 வது சுதந்திர தினத்தை, மிக எழுச்சியாக மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் arya vysya charitable and education foundation president திரு.கே. ரவிகுமார் அவர்கள், தாளாளர் திரு.ராம குமார் அவர்கள் மற்றும் நிதி பொறுப்பாளர் சி.ஆர். கிஷோர் பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு

சிறப்பு விருந்தினரை வரவேற்கும் வகையில் மாணவர்கள் அணிவகுப்பு அபிமன்யு, அர்ஜுனா, பீஷ்மா மற்றும் கர்ணா ஆகிய நான்கு வகையான அணிவகுப்புகள் சூழ அழைத்து அனைவரையும் வரவேற்று மரியாதை செலுத்தப்பட்டனர்

அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மூவர்ண கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கியும் சுதந்திர தின நிகழ்ச்சி தொடங்கியது.

நம் இந்திய நாடு “மொழிகளின் காட்சிச்சாலை” என்னும் மேற்கோளை வலியுறுத்தும் வகையில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் உரை நிகத்தினர் .

மேலும் “இந்திய நாடு என் நாடு

இந்தியன் என்பது என் பேரு”

என்ற தேசிய விருது பெற்ற கவிஞர் வாலியின் திரையிசை பாடலுக்கு மாணவ மாணவியர்கள் “இந்தியர்கள் இனம், மொழி, மதம் ஆகியவற்றால் வேறுபட்டாலும் அனைவரும் இந்தியர்” என்ற உணர்வை பெறும் வகையில் பெருமை சேர்த்தனர்

இறுதியாக மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் பி சுப்பிரமணியன் பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீலதா மற்றும் teachers ,students and parents .. உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..

About Author