
CHENNAI: அ.இ.அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, தென்சென்னை வடக்கு (மே) மாவட்டம், தியாகராய நகர் தொகுதி, 134வது தெற்கு வட்டத்தில் உள்ள சின்னராஜ பிள்ளை தோட்டத்தில், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர், புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் தீவிர பக்தன் டாக்டர் சுனில் வி. தலைமையில் கட்சி கொடி ஏற்றி 500 பேருக்கு அன்னதானம், மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை 134 வது தெற்கு வட்ட கழக செயலாளர் கார்டன் வி.சுரேஷ்குமார் ஏற்பாடு செய்திருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர்.ஜெ.ஜெயவர்த்தன், மு.உதயா, நிர்வாகிகள்: ஆர்.மதுசூதனன், ஆர்.தமிழரசு, ஆர்.ரத்தினகுமாரி, கராத்தே எஸ்.சேகர், காலனி சி.பிரபாகரன், கோவிந்தராஜன், மோகனகிருஷ்ணன், குமார், முத்துலட்சுமி, வைத்தீஸ்வரன், புஷ்பா, பிரகாசம், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య