கல்வித்துறையில் ரோபோடிக்ஸ் மூலமாக ஒரு புதிய புரட்சியை மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி விவேக் திலிப் கூறியதாவது,
ரோபாட்டிக்ஸ் மற்றும் STEM (Science, Technology, Engineering, Mathematics) கண்டுபிடிப்புகள் மூலம் கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பணியில் மைபோட் வென்ச்சர்ஸ் (MiBOT Ventures) ஈடுபட்டுள்ளது.
MiBOT, இந்தியாவிலிருந்து உலகிற்கு சிறந்த ரோபாட்டிக்ஸ் தீர்வுகளை வழங்குகிறது. மேலும் மதிப்பு கூட்டப்பட்ட புதுமையான தீர்வு வழங்குநராக இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
இன்றைய வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் உலகில், தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வது அவசியம் மட்டுமல்ல தேவையும்கூட. அதனால்தான் MiBOT பாடப்புத்தகங்களுக்கு அப்பால் சென்று, வகுப்பறைகளை புதுமை மையங்களாக மாற்றும் ரோபாட்டிக்ஸ் திட்டங்கள் மற்றும் தயாரிப்புகளை வழங்குகிறது.
ஒரு மழலையர் பள்ளி மாணவர் தனது முதல் ரோபோவை அசெம்பிள் செய்வதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவர் AI-இயங்கும் போட்டை புரோகிராமிங் செய்வதாக இருந்தாலும் சரி, இந்தியாவில் முதல் முறையாக, 43 கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒருங்கிணைப்பான விருது பெற்ற ஃபின்னிஷ் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்ட பாடத்திட்டம் உள்ளது.
கல்வி துறையில் மட்டுமின்றி, MiBOT வென்சர்ஸ் தொழில்நுட்பத்தை தொழில்களில் உள்ளே சென்று, தங்கள் செயல்முறைகளை துரிதப்படுத்தி, ஆட்டோமேஷன் மற்றும் புதுமையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், குழந்தைகளின் சிந்தனை திறனை மேம்படுத்தும் வகையில், சாஃப்வேர் மற்றும் ஹார்டுவேரும் இந்த வகுப்புகளின் மூலம் வழங்கப்படுகிறது.
MiBOT நிபுணத்துவம் மேம்பட்ட ரோபாட்டிக்ஸ் தீர்வுகளில், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் உலகில் வணிகங்கள் முன்னேற உதவுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற தொழில்களில், MiBOT ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. செயல்பாடுகளை நெறிப்படுத்துவதோடு ஆபத்தான சூழல்களில் அபாயங்களை குறைக்கிறது.
இதுவரை தயாரிக்கப்பட்ட போட்டுகளுடன் போட்டியிடும் வகையில் MiBOT தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றை நிஜ உலக பிரச்சனைகளைத் தீர்க்க உதவக்கூடிய வகையில் உருவாக்கியுள்ளோம்.
MiBOT Ventures இன்றைய நாளில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப முனைவோராக உருவாகியிருக்கிறது இவ்வாறு அவர் கூறினார். இணை நிறுவனர் கலைக்கோவன் அந்தோணி, நிதி ஆலோசகர் லக்ஷ்மண் குமார் நாசர்புரி ஆகியோரும் அருகில் இருந்தனர்.


More Stories
SRMIST Launches AI-Powered Talent Acquisition Agent with Prayag.ai
Aligned with NEP and Atmanirbhar Bharat, KCG College of Technology Unveils AICTE
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 350 மாணவர்கள் ஐ.டி. மற்றும் சைபர் பாதுகாப்பு டிப்ளோமாவில் பட்டம் பெற்றனர்