சென்னை நெற்குன்றம் அழகம்பாள் நகரில் கஸ்தூரி தனியார் மண்டபத்தில் சென்னை மாநகர மலைக்குறவன் கருவேப்பிலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இதில் சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாளர் துணைத் தலைவர் துணைச் செயலாளர் என ஏழு பேர் கொண்ட பதவிகளுக்கு மொத்த வாக்காளர் 333 உறுப்பினர்கள் வாக்களித்தனர் இந்த தேர்தல் ஆனது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு சங்கத்தின் விதியின்படி இன்று தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் வெற்றி பெற்ற முனைவர் ஆ பட்டபழனி செயலாளர் வில்லிவாக்கம் எம் பிரபு பொருளாளர் அரும்பாக்கம் சக்தி நாராயணன் மற்றும் துணைத் தலைவர்களாக பூபாலன் சுரேஷ் துணைச் செயலாளராக ஜெயசீலன் ஹேமாவதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவரைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அப்போது பேசிய தலைவர்கள் நாங்கள் பதவியேற்று இன்று முதல் வியாபாரின் நலனுக்காகவும் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் அனைவருக்கும் சமமான சமத்துவமான நடவடிக்கையோடு செயல்படுவேன் என்று உறுதி அளித்தனர் மேலும் இந்த சங்கத்தில் 333 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வாக்களித்த அத்தனை உறுப்பினர்களும் எந்தவித பிரச்சனைக்கு உள்ளாக்காமல் நேர்மையான முறையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் நிகழ்ச்சி இறுதியாக தேர்தல் நடத்துவதற்கு பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்
சென்னை மாநகர மலைக்குறவன் கருவேப்பிலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைவர்கள் தேர்வு


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.