ஆந்திர மாநிலம் சித்தூரில் மாமன்னர் மருதுபாண்டி சகோதரர்களுக்கு சிலை நிறுவிய
ஆந்திர மாநில முதலியார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஆந்திர மாநில முதலியார் நலன் மற்றும் மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவருமான
புல்லட் டி.ஜி .சுரேஷ் அவர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .
அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்கம் மற்றும் அறக்கட்டளைகள் தலைவரும் வாக்ஸ் குழுமத்தின் தலைவருமான இராவணன் ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இரா.கற்பூரப்பாண்டியன், கே.கணேசன், எஸ். இராஜரெத்தினம், முன்னாள் ஜ.பி.எஸ் அதிகாரி எஸ்.வனிதா, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக துணை வேந்தர் பேராசிரியர் பாஸ்கர் மணிமாறன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத் தின் முன்னாள் நிதி ஆலோசகர் எம். மலைச்சாமி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய ஓய்வு பெற்ற நிர்வாக பொறியாளர் ஜி.சேகர்,, தஞ்சை தமிழ் பல்கலைகழக செனட் உறுப்பினர் ஜி.சரவணக்குமார், அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க முன்னாள் தலைவர் எம்.கெளரிசங்கரன், கே வி டி பல்நோக்கு மருத்துவமனையின் நிறுவனர் டி.செந்தமிழ் பாரி,ஆகியோரை சென்னை எம்.எம்.ஏ.எஸ் கூட்டமைப்பின் தலைவர் அரிமா. ஏ.வி.குமரேசன் வரவேற்று பேசினார். அகமுடையார் கல்வி வளர்ச்சி சங்க செயலாளர் அரிமா .ஏ. சரவணன் நன்றியுரை வழங்கினார். விழா நிகழ்ச்சியை சென்னை எம்.எம்.ஏ.எஸ் கூட்டமைப்பின் செய்லாளர் ஆர்.முத்துகுமார் தொகுத்து வழங்கினார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.