March 7, 2026

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில், சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

நூற்றுக்கணக்கான முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வழியாக, தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு எங்கள் நீண்டகால கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு. 2012ம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துதல், முன்னாள் வீரர்களின் குடும்பங்களுக்கு தேவையான நலன்கள் வழங்குதல் போன்ற முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மனோகரன் முதன்மைச் செயலாளர்
தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினர் சங்கம்

மகாத்மா காந்தி பிறந்த நாளான இன்று
அகிம்சை வழியில் எங்களது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.

11 அம்ச கோரிக்கைகளை
மத்திய மாநில அரசு நிறைவேற்று தர
இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகிறோம்.

மாநில அளவிலான வேலைவாய்ப்பிலும்
கல்வியிலும் மருத்துவத்திலும் எங்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு வேண்டும்

மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை
அமல்படுத்த வேண்டும் என்றும்.
ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஒன்றன் 1 பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
துணை ராணுவப்படையை அமைத்து எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு நாள் ஒதுக்கப்படுவது போல் எங்களுக்கும் ஒதுக்க வேண்டும்.

About Author