மனிதநேயர் மக்கள் போற்றும் தலைவர் கிருத்துவ மக்களின் பாதுகாவலர் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்களின் 62 வது பிறந்தநாள் விழா குடும்பத்தினருடன் சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் அமைந்துள்ள இயேசு கிறிஸ்துவின் ஜெப ஆலய பேராலயத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
இந்த பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் அனைத்து மக்களுடன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மேலும் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் சிறு வயது முதலே தனது கடின உழைப்பால் தன்னுடைய நலன் மட்டும் பெரியதல்ல ஏழ்மை நிலையில் உள்ள வறுமையில் வாழக்கூடிய மக்களுக்கு தான் ஏதாவது செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கடின உழைப்பால் இந்த பொறுப்பில் தான் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
மேலும் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேராயர்கள் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவரும் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான அசைவ உணவு வழங்கப்பட்டது.
மேலும் பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் கூறியது தனது இரண்டு மகன்கள் மற்றும் பெண் மருமகள் பேரப்பிள்ளைகள் அனைவருடன் இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என உணர்ச்சி பொங்க தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai