சென்னை, டிசம்பர் 5, 2025: அப்பல்லோ டயர்ஸ், யுனைடெட் நேஷன்ஸ் டெவலப்மென்ட் ஃப்ரோகிராம் (UNDP) இந்தியாவுடன் இணைந்து, சென்னையில் 8வது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வினாடி வினா கிராண்ட் ஃபினாலே 2025 ஐ நடத்தியது. இந்த முயற்சி, இளைஞர்கள் அன்றாட வாழ்க்கையை இயற்கை எவ்வாறு ஆதரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும், இந்தியாவின் பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் தேர்வுகளைச் செய்யவும் ஊக்குவிக்கிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 12 இறுதிப் போட்டி அணிகள் தொடர்ச்சியான பிராந்திய சுற்றுகளுக்குப் பிறகு தேசிய பட்டத்திற்காக போட்டியிட்டன. அகமதாபாத்தில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரி தேசிய பட்டத்தை வென்றது, சென்னை மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி முதல் ரன்னர்-அப் ஆகவும், பெங்களூருவில் உள்ள செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகம் மூன்றாவது ரன்னர்-அப் ஆகவும் தீர்மானிக்கப்பட்டது.
“இயற்கையுடன் இணக்கமாக – பூமியிலிருந்து, பூமிக்காக” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல், பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் இயற்கையுடன் இணக்கமான உறவை வளர்ப்பதற்கும் உள்ள அவசரத் தேவையை எடுத்துக்காட்டுவதற்காக சுற்றுச்சூழல் நிபுணர்களை ஒன்றிணைத்தது.
இந்த நிகழ்வில் பேசிய தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தின் முதன்மை வனப்பாதுகாவலரும் உறுப்பினர் செயலாளருமான மிதா பானர்ஜி, “காடுகள் நமக்கு சுத்தமான காற்றையும் காலநிலை நிலைத்தன்மையையும் தருகின்றன, இருப்பினும் அவை கடுமையான அழுத்தத்தில் உள்ளன. பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது வனத்துறையின் வேலை மட்டுமல்ல, அப்போலோ டயர்ஸ் போன்ற சமூகங்கள், கூட்டாளிகள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் செயல்பட வேண்டும்” என்றார்.
அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட்டின் சஸ்டனைஃபிலிட்டி மற்றும் CSR பிரிவின் தலைவர் ரினிகா குரோவர் கூறுகையில், “இந்த தளத்தின் மூலம், இளைய தலைமுறையினர் பல்லுயிரியலைப் புரிந்துகொள்ளவும், பாராட்டவும், செயல்படவும் அவர்களை ஈடுபடுத்தவும், அதிகாரம் அளிக்கவும் நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். UNDP உடனான எங்கள் ஒத்துழைப்பு, மிகவும் நிலையான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக சமநிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.”
“சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வினாடி வினாவின் 8வது பதிப்பில் அப்பல்லோ டயர்ஸுடனான எங்கள் ஒத்துழைப்பு, தனியார் துறையும் மேம்பாட்டு நிறுவனங்களும் கூட்டாக எவ்வாறு செயல்களைத் தூண்ட முடியும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு. ஆயிரக்கணக்கான இளம் மனங்களை ஈடுபடுத்துவதன் மூலம், இந்த முயற்சி பல்லுயிரியலை ஒரு தொலைதூரக் கருத்தாக அல்ல, மாறாக ஒரு தினசரி பொறுப்பாகப் புரிந்துகொள்ளும் ஒரு தலைமுறையை உருவாக்க உதவுகிறது” என்று UNDP இந்தியாவின் இயற்கை வள மேலாண்மை (NRM) மற்றும் பல்லுயிர் பெருக்கத் தலைவர் டாக்டர் ருச்சி பந்த் கூறினார்.
இந்த வினாடி வினா, அப்பல்லோ டயர்ஸின் தொடர்ச்சியான நிலைத்தன்மை மற்றும் சமூக ஈடுபாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி மற்றும் இளைஞர் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
யுஎன்டிபி இந்தியா, பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்கவும், நிலையான நிலம் மற்றும் நீர் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், காலநிலைக்கு ஏற்ற மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நிறுவன திறனை உருவாக்கவும் உதவுவதன் மூலம் நிலையான இயற்கை வள மேலாண்மையை ஆதரிக்கிறது. நீர் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், சீரழிந்த நிலப்பரப்புகளை மீட்டெடுக்கவும், இயற்கை சார்ந்த வாழ்வாதாரங்களை ஆதரிக்கவும், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் கிராமப்புற மக்களுக்கு உதவவும் இந்த அமைப்பு அரசாங்கங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தப் பணியின் மூலம், நாடு முழுவதும் நீண்டகால சுற்றுச்சூழல் மீள்தன்மையை மேம்படுத்தும் அதே வேளையில், வாழ்வாதாரத்தையும் நல்வாழ்வையும் நிலைநிறுத்தும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதை யுஎன்டிபி நோக்கமாகக் கொண்டுள்ளது.


More Stories
Back-to-School Gets Sweeter as Lotte Choco Pie Teams Up with Mother-Kid Influencers
ஆட்டோரெல்லி நிசான், ஐயப்பந்தாங்கலில் புதிய Nissan Tekton அறிமுகம்
IIMBue 2026 to Convene India’s Top Business Minds to ‘Change the Orbit’ of Leadership