சென்னை எழும்பூரில் உள்ள சுபைதா மெடிக்கல் சென்டர் சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த இலவச கண் மருத்துவ முகாமினை அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் ஏ ஜே டாக்டர் அமீர்ஜகான் அவர்கள் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் மேலும் அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த டாக்டர் அமீர்ஜஹான் தெரிவித்ததாவது ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற வழியில் ஏஜே சுபைதா மெடிக்கல் சென்டர் மூலம் 17 11/2024 மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் 18 11 24 அன்று முதல் 45 நாட்கள் வரை ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து சிகிச்சை வழிமுறைகளும் பரிசோதனை செய்து அவங்களுக்கு தேவையான வழிமுறைகளையும் செய்து தரப்படும் மேலும் இந்திய நாட்டில் ஆயுர்வேதம் யுனானி சித்தா மற்றும் ரஷ்ய மருத்துவ பேராசிரியர்களால் பயன்படுத்தப்படும் நவீன மருத்துவ முறைகள் மூலம் சர்க்கரை வியாதிகளால் வரும் கால் புண்களை குணப்படுத்த அனைத்து இலவச ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றும் மேலும் இலவச கண் பரிசோதனை செய்தல் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை ஏ ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருவதாக கூறினார் மேலும் மருத்துவத்துறையில் உலக அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது வெளிநாட்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால் குறைந்தது 50 லட்சம் செலவாகும் ஆனால் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதே அறுவை சிகிச்சைக்கு 5 லட்சம் இருந்தால் போதும் ஏனென்றால் சென்னையில் அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கு சிறந்த மருத்துவர்கள் பணியாற்றி வருவதாகவும் இந்திய நாட்டின் தலை சிறந்த மாநிலமாக தமிழ் நாடு என்றும் உலகத்திற்கே மருத்துவத் துறையில் தமிழ்நாடு வழிகாட்டியாக மாறும் அது மட்டுமல்ல இந்த மருத்துவ சிகிச்சையின் மூலம் இந்தியா மருத்துவத் துறையில் பொருளாதார வளர்ச்சி மிக்க நாடக மாறும் என்று தெரிவித்தார் இந்த இலவச மருத்துவ முகாம் நிகழ்வில் அகில இந்திய வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தின் இயக்குனர் டாக்டர் ஏ நஜிருல் அமீன் டாக்டர் ஏ அசுதோஷ் குமார் டாக்டர் ஆர எம் பஹத் டாக்டர் ஏ சஜிதா டாக்டர் என் ரிஸ்வானா மற்றும் செவிலியர்கள் ஏ.ஜே சுபைதா மெடிக்கல் சென்டர் ஊழியர்கள் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
உலக அளவில் மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குவதாக டாக்டர் ஏ ஜே அமீர்ஜகான் தெரிவித்துள்ளார்


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య