சென்னை பெருநகர மாநகராட்சி உட்பட்ட 109வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தலைமையில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஏழை எளிய மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் இளநீர் தர்பூசனை வெள்ளரிக்காய் குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டது தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி நீர்மோர் எப்போதும் தடையின்றி கோடை வெயில் காலங்களில் 109வது வார்டு அலுவலகம் அருகே திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில் இன்று நீர் மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்கள் அனைவருக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது மேலும் கட்சிக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்துடன் சேவை மனப்பான்மை அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து பணியாற்றுவேன் என திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர் கராத்தே செல்வோம் வட்டத் தலைவர் ஜே மோகன் நெல்சன் பிரீட்ஸ் எம் எஸ் பாஸ்கரன் அமிர்தராஜ் சையத் சுந்தர் முனிசாமி சக்திவேல் கராத்தே இளங்கோ ஜெயராமன் சுல்தான் விமோ மகாலட்சுமி இன்ப ராஜா மூர்த்தி சீரணி தாஸ் எம்.எஸ் ராஜன் அன்பு லோகநாதன் ராஜேஷ் புகழேந்தி விவேக் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?