June 14, 2025

மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கில் நகர் பார்க் குழந்தைகள் விளையாட்டு உபகரணத்தை திறந்து வைத்தார்

சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட 109 வது வார்டுடில் உள்ள கில் நகர் பார்க்கில் குழந்தைகள் விளையாடுவதற்கான உபகரணங்களை தன்னுடைய மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணத்தை திறந்து வைத்தார் தொடர்ந்து இந்த நிகழ்வில் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் கராத்தே செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் கூறியது தான் மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் போது பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருவதாகவும் அதனைத் தொடர்ந்து கில் நகர் பார்க் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெறும் கட்டான் தரை போல் இருந்தது அதனை தான் பதவியேற்று பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தான் செய்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் பாராட்டக்கூடிய அளவிற்கு இந்த கில் பார்க் மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்தப் பட்டுள்ளது தான் பதவியேற்று மூன்று வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்த மூன்று ஆண்டுகளில் கில் நகர் பார்க் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கும் மிகச் சிறப்பான முறையில் இந்த கில் நகர் பார்க் புறநமைக்கப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்கும் பொதுமக்கள் நடைபாதை செல்வதற்கும் மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தான் செய்து கொடுத்திருப்பதாகவும் அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் வைக்கின்ற கோரிக்கைகளையும் ஏற்று அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே தனது கடமை என்றும் அதேபோல் குழந்தைகள் விளையாடுவதற்கு அனைத்து உபகரணங்களும் இந்த கில் நகர் பார்க்கில் ஏற்பாடு செய்திருக்கிறோம் மேலும் மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்கின்ற ஒரு சிறந்த பணியாகத்தான் இந்த மூன்று ஆண்டு காலமாக பணியாற்றி வருவதாகவும் கூறினார் மேலும் மக்கள் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தனக்கு உறுதுணையாக செயல்படுவதாகவும் அதுமட்டுமல்ல சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் மாநகராட்சி ஆணையாளர் குறிப்பாக தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது மன நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் E e முத்தையா A e ராமகிருஷ்ணன் ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் கராத்தே செல்வம் வட்டத் தலைவர் மோகன் நெல்சன் பிரிட்ஸ் பாஸ்கரன் கராத்தே இளங்கோ அஜிலேஷ் துரைவேல் முருகன் தங்கையா சிவா வேல் நாகராஜன் சுல்தான் ரகுமான் வழக்கறிஞர் விக்டர் உள்ளிட்ட கில் நகர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

About Author