சென்னை,அக்டோ. -சென்னை வடபழனி சென்னை தி ஐ பவுண்டேஷன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக மயோபியா (குறுகியபார்வை)கிளினிக்தொடங்கப்பட்டது.
இந்த கிளினிக் பற்றிய சிறப்புகளை சென்னை தி ஐபவுண்டேஷன்,மருத்துவமனையின் துணைத் தலைவர் உலகநாதன், மருத்துவகண்காணிப்பாளரும், மயோபியா முதன்மை மருத்துவரும், குழந்தைகள் கண் மருத்துவர் டாக்டர் அங்கீதா பிசாலி, முதன்மைகண்பரிசோதகர் மற்றும்கண்ணாடிபிரிவு ராஜிபிநாயர்கூறுகையில் இந்த குறைபாடு 2000வது ஆண்டில்5%இருந்துதற்போது 25% மாறி உள்ளது 2050 ஆம் ஆண்டில் 50 % கடக்ககூடும் என்ற நிலையில் இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய பிரத்தியோகமாக இந்த மருத்துவமனையில் கிளினிக்கை துவக்கி உள்ளோம்.
மேம்பட்ட நோய் அறிதல் கருவிகளை பயன்படுத்தி விரிவான கண் பரிசோதனை, சரி செய்ய லென்ஸ் பரிந்துரைத்தல், குறைந்த அளவிலான அட்ரோபின் சொட்டுக்கள், மயோபியா கட்டுப்பாட்டு கண்ணாடிகள் ஆர்த்தோ கெராட்டாலஜி உள்ளிட்ட மயோபியா கட்டுப்பாட்டு மேலாண்மை, வெளிப்புற செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் திரை வெளிப்பாட்டை குறைக்கவும் வாழ்க்கை முறை ஆலோசனை,ஒவ்வொரு குழந்தைகளின் தேவைக்குஏற்ப வழக்கமான கண்காணிப்பும் பின் தொடர் திட்டம் ஆகும்.
இந்தபரிசோதனை5வயது முதல் 15 வயது வரை இலவசமாகவும்,ஆலோசனையும்வழங்கப்படுகிறது. மயோபியா கிளினிக் என்பது ஒரு சிகிச்சை மையம் மட்டுமல்ல, நீண்டகால அபாயங்களை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. குழந்தை கண் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவரின் நிபுணர் குழு, சிகிச்சையுடன் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் கவனம்செலுத்துதல் ஆகும்.


More Stories
Prashanth Hospitals Expands Access to Advanced Cardiac Care with South Chennai’s First Laser Angioplasty Facility
SIMS Hospital Treats Spinal Compression in 84-Year-Old with Pacemaker Through Single-Incision Endoscopic Surgery
Kauvery Hospital Alwarpet Performs World’s First Catheter-Based treatment for failing Aortic and Pulmonary Valve