March 7, 2026

காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறையின் தலைவர் எம் பி ரஞ்சன் குமார் அவர்களின் 49வது பிறந்தநாள் விழா.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி துறையின் தலைவர் எம் பி ரஞ்சன் குமார் அவர்களின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில் எஸ் சி துரை சார்ந்த 49 நிர்வாகிகள் எம் பி ரஞ்சன் குமார் பெயரை பச்சை குத்தினர்.

மேலும் அதனைத் தொடர்ந்து எம் பி ரஞ்சன் குமார் அவர்களின் பிறந்தநாளில் பட்டாசு வெடித்து கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் திரு எம் பி ரஞ்சன் குமார் அவர்கள் எஸ் சி துறையில் பொறுப்பேற்றதில் இருந்து தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக திகழ்ந்து வருகிறார் என மக்கள் போற்றக்கூடிய அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் அவருடைய நற்பண்புகளும் அன்பும் அறனும் எப்போதும் நிலைத்து நிற்க வேண்டும் அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு பல நன்மைகள் செய்திட வேண்டுமென அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் ஓபிசி அணியின் மாநில தலைவர் நவீன் மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி மாநில செயலாளர் ரஞ்சித் குமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் உமா பாலன் எஸ் சி துறை தலைமை நிலைய செயலாளர் ரஞ்சித் குமார் சர்க்கிள் தலைவர்கள் சக்கரவர்த்தி ரியாஸ் முகப்பேர் பிரபா செய்யூர் தனிகா ஆறுமுகம் உலகநாதன் வெங்கடேஷ் ராஜசேகர் அசின் வீரன் மேரி வயலட் சித்ரா அம்மு உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

About Author