தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் அய்யா ஜி கே வாசன் அவர்களின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தி நகர் கோதண்டம் அவர்கள் தலைமையில் தொடர் 26 27 28 ஆகிய மூன்று நாட்கள் திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது மேலும் ஐயா ஜி கே வாசன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென வடபழனி முருகன் திருக்கோயில் தங்கத் தேர் உலா நிகழ்வு தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு டி நகர் கோதண்டம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதனை தொடர்ந்து சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும் அதனைத் தொடர்ந்து 27 12 2025 அன்று காலை கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் மதியம் 12:00 மணி அளவில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
28 12 2025 ஞாயிற்றுக்கிழமை காலை அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஐயா ஜி கே வாசன் அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டுமென தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தி நகர் கோதண்டம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதை தொடர்ந்து மதியம்12 மணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு பிரியாணி வழங்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி சுப்பராயிலு டி வி சீனிவாசன் எஸ் கோவிந்தராஜன் கே முரளி ஜி வி குமார் கே எஸ் சுந்தரம் எலக்ட்ரிக் பாலு கே பிரபு கட்சியின் மாநில செயலாளர் முனிவர் பாஷா ராஜம் எம்பி நாதன் வழக்கறிஞர் மகாதேவன் ரவிராஜன் சுந்தரவரதன் கிண்டி மம்மு திருமதி கீதா ராமச்சந்திரன் எம்ஜிஆர் நகர் ஆறுமுகம் வடபழனி பிரபாகரன் என் எம் கிருஷ்ணகுமார் எஸ் ஆர் ராமு மோகனரங்கன் தி நகர் ஜெய்கணேஷ் சி சிவராமன் வேதா தி நகர் வெங்கடேசன் ஜீவி ராமு ராஜேஷ் மதன் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் ஐயா ஜி கே வாசன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உறுதுணையாக செயல்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் மாவட்டத் தலைவர் டி நகர் கோதண்டம் அவர்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.


More Stories
AMPA SKYONE MALL HOSTS “MAGICAL VOICES & VIBES” CELEBRATING INCLUSIVE MUSICAL TALENT
Chennai Teen Nisha Sasikumar Becomes Youngest Woman in the World to Summit Mount Everest from Nepal Side
మరపురాని మహామనిషి …ఎన్టీఆర్ -తమ్మినేని బాబు వ్యాఖ్య