July 21, 2026

பறவைகளை வைத்து அறிவியல் பூர்வமாக நிறுபிக்கபடாத எந்த மூட நம்பிக்கைகளையும் மக்கள் நம்ப வேண்டாம்

பறவைகளை வைத்து அறிவியல் பூர்வமாக நிறுபிக்கபடாத எந்த மூட நம்பிக்கைகளையும் மக்கள் நம்ப வேண்டாம் என திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்

சென்னை தி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பந்தைய புறாக்களுகான ஊட்ட சத்து மருந்து அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைபட இயக்குனர் வெற்றிமாறன், 8ற்கும் மேற்பட்ட புறாக்களுக்கான கால்சியம், கார்போஹைட்ரேட், ஊட்டசத்து மருந்துகளை அறிமுக செய்து வைத்தார் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் புறா வளர்ப்பவர்கள் கவனமாக முக கவசம் அணிந்துகொள்ள வேண்டும் புறா வழியாக நோய் பரவி நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிர்போக வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் பல வருடங்களாக புறா பந்தயங்கள் நடைபெற்று வருகிறது, ஆனால் ஊட்டசத்து மருந்துகள் யூரோப் போன்ற நாடுகளிலிருந்து கொண்டு வந்து கொடுத்தோம் ஆனால் தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டில் கிடைகிறது அதை தானும் தன்னுடைய புறாக்களுக்கு கொடுத்து வருவதாகவும், பறவைகளை மூட நம்பிக்கைகள் அதிகரித்து வருகிறது, ஆகவே அறிவியல் பூர்வமாக நிருபிக்கபடாதா எதையுமே மக்கள் நம்ப கூடாது என வெற்றிமாறன் கூறியுள்ளார்

பேட்டி
வெற்றிமாறன்
திரைபட இயக்குனர்

About Author