July 21, 2026

அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்த கால்பந்து நிறைவு போட்டி லேடன்ட்வியூ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்றது

சென்னை கால்பந்து லீக் – சீசன் 5 இன் கிராண்ட் நிறைவு போட்டி 13 9 2025 ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கால் பந்து நிறைவு போட்டி நடைபெற்றது.

இதில் 43 அணிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட இளம் வீர வீராங்கனைகள் பங்கு பெற்றனர்.

மேலும் தொடர் போட்டியின் நிறைவாக , குத்தம்பாக்கம் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் இரட்டை சாம்பியன்களாக தேர்வு செய்யப்பட்டனர் இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இறுதிப் போட்டிகளில் வென்றனர்.

இப்போட்டியின் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் திரு டி நடராஜன் மற்றும் தேசிய அளவிலான ஏர் ரைபிள் ஷூட்டர் திருமதி நர்மதா நிதின் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவர்த்தனர் தொடர்ந்து பேசி அவர்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி விதமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்க்க மாணவ மாணவிகள் எப்போதும் செயல்பட வேண்டும் மேலும் மாணவர்களின் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்திட சமூக பொறுப் புணர்ச்சியுடன் லேட்ன்ட்வியூ நிறுவனம் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மாலைப் பொழுதை இந்திய அணி கிரிக்கெட் வீரர் திரு. டி. நடராஜன் மற்றும் தேசிய அளவிலான ஏர் ரைபிள் ஷூட்டர் திருமதி நர்மதா நிதின் ராஜு ஆகியோர் அலங்கரித்தனர், அவர்கள் சாம்பியன்களைப் பாராட்டினர் மற்றும் வளரும் விளையாட்டு வீரர்களுடன் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை கால்பந்து லீக் சீசன் 5 இல் சாம்பியன் பட்டம் வென்ற குத்தம்பாக்கம் அரசுப் பள்ளியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் புகைப்படங்களை நிகழ்விலிருந்து இணைத்துள்ளீர்கள்.

About Author