சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் R J R ஹெர்பல் மருத்துவமனையின்கிளை மேலாளர் செல்வம் அவர்கள் செய்தியாளர்களிடம்கூறுகையில்,
சென்னை தி. நகரில் உள்ள R J R ஹெர்பல் மருத்து வமனையை 13.01.2026 மாலை 6.30 அளவில் சிவசாமி வேலுமணி என்பவர் 30குண்டர்களுடன் மருத்துவமணைக்குவந்து என்னிடமும், சகப்பெண் ஊழியர்களிடமும் உங்கள்முதலாளிS.R. ஜெயதுரை எங்கே என்று கேட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் . பின்னர் வெளியே சென்று கார் கண்ணாடிகளை உடைத்து சென்றனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் மருத்துவமனையின் மேலாளர் புகார் அளித்ததின் பேரில் காவலர்கள் வந்து விசாரணை செய்து 5 நபர்களை அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக முதல் தகவல்அறிக்கையைபதிவு செய்து. அவர்களை கைது செய்யாமல் வெளியே அனுப்பி விட்டனர் .
எனவே எங்களுக்கு அவர்களால் பாதிப்பு ஏற்படுமோ என்று அச்சம் உள்ளது. ஆகையால் காவல்துறை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த செய்தியாளர் சந்திப்பு மூலம் தெரிவித்தார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.