இந்த நிகழ்ச்சியில் புதிதாக மேற்கண்ட கூட்டமைப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 142 பொறுப்பாளர்களை கௌரவிக்கும் விழா , புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா மற்றும் ரியல் எஸ்டேட் எழுச்சி தின விழாவாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய செய்லாளர்கள் வி .ஜெயச்சந்திரன், எஸ்.செந்தில்குமார் , டி.கிருஷ்ணகுமார், A.நரேஷ் சந்த், ஆகியோர்களின் தலைமையில்,
தேசிய செயற்குழு தலைவர் பி.ஜவஹர் தொகுப்புரையில், துணைத் தலைவர்கள் S.ராஜசேகர், R.பிரசன்னகுமார் அமைப்புச் செயலாளர் ராஜா ஃபக்ருதீன் அலிஅகமத்,தேசிய ஒருங்கிணைப்பாளர் பி . உதயகுமார், இணைச்செயலாளர் ஜெ. கார்மேகம் , துணைப் பொருளாளர் பி .சக்திவேல், மாநில பொறுப்பாளர்கள் S.பாலாஜி, R.கண்ணன் நந்தகுமார், A.பாலசுப்பிரமணி, புதுவை அன்பரசு, எஸ்.மாறன் சேலம் கணேசன், ஆர்.கலைவாணன், R.ஹரிகிருஷ்ணன், கர்நாடக மாநில முன்னாள் பொறுப்பாளர் திரு ப.சரவணன் தலைமை நிலையச் செயலாளர் ஆர் .கார்த்திக், தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர் பி .விஷ்ணுகாந்த், மற்றும் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர் . மேலும் சிறப்பு விருந்தினர்களாக தகவல் ஆணையத்தின் (ஆர்.டி.ஐ ) தலைவர் R.பிரியகுமார், அறிவியலாளர் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி V.பொன்ராஜ், நீதியின் குரல் நிறுவனரும், மக்கள் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சி.ஆர்.பாஸ்கரன், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி , வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் இளைய கட்டபொம்மன் , ஸ்ரீதேவி ஹென்றி, திரைப்பட நடிகர் பரணி பத்திரிக்கையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் DSR.சுபாஷ் ஏ.வேல்முருகன் எஸ்.ராஜேந்திரன் கொளத்தூர் பாபு கேட்டரிங் பாபு உட்பட முக்கிய பிரமுகர்கள், உறவினர்கள், சங்கத்தினர் குடும்பத்தினர் நண்பர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைவருக்கும் மாநில செயற்குழு உறுப்பினர் ஹாரிசன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் திருமதி பிரியா ஹென்றி நன்றி தெரிவித்தார்.
மேலும் முன்னதாக தலைவர் டாக்டர் ஹென்றி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கோயில்கள் தேவாலயங்கள் பள்ளிவாசல்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது .
ஆதரவற்ற சிறார் இல்லம், எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகள் இல்லம், மனநலம் குன்றியவர்கள் இல்லம், கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லம், பார்வையற்றவர்கள் இல்லம், முதியோர் இல்லங்களில் நலத்திட்ட உதவிகளும், அறுசுவை உணவும், பள்ளி மாணவ,மாணவியர்க்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மரக்கன்றுகள் நடப்பட்டது.


More Stories
Back-to-School Gets Sweeter as Lotte Choco Pie Teams Up with Mother-Kid Influencers
ஆட்டோரெல்லி நிசான், ஐயப்பந்தாங்கலில் புதிய Nissan Tekton அறிமுகம்
IIMBue 2026 to Convene India’s Top Business Minds to ‘Change the Orbit’ of Leadership