July 2, 2026

அர்ஜுனா அறக்கட்டளையின் சார்பாக மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது

Chennai: அர்ஜுனா விருது வாங்கிய தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த பாஸ்கர் அவர்களின் தலைமையில் அர்ஜுனா அறக்கட்டளையின் சார்பாக சென்னை கேகே நகர் எம்ஜிஆர் மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வில் 400 மற்றும் 500 வரை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அவர்களின் வெற்றியை ஊக்கி வைக்கும் விதமாக பாராட்டு விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் கணக்கியல் துறை தலைவர் மற்றும் சென்னை மாமன்ற உறுப்பினர் தனசேகரன் அவர்களும் உலக ஆணழகன் அருணாச்சலம் இந்திய ஆணழகன் மன்சூர் பாஷா தேசிய அத்லட்டிக் வீரர் வெங்கட் ஐ சி எப் சேர்மன் இவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் இந்நிகழ்வில் வழக்கறிஞர் புவனேஸ்வரி மாரிமுத்து லோகேஷ் மூர்த்தி கண்ணன் பிரகாஷ் தனபால் திரைப்பட இயக்குனர் விஜய் புதலிங்கம் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர் இந்த சிறப்பான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்விக்கு தேவையான உபகரணங்கள் பள்ளி பேக் மற்றும் புத்தகங்கள் மற்றும் பதக்கங்கள் சான்றிதழ் பெற்றுச் சென்றனர் அனைவருக்கும் மதிப்பெண் அடிப்படையில் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கல்வியில் சிறிது விளங்கிய மாணவ மாணவிகளுக்கு மேலும் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கப்பட்டது அதன் பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்று அறுசுவை உணவுடன் விழா இனிதாக நிறைவு பெற்றது

About Author