ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்த சமாஜம் சார்பில் சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் ஆனந்த நிலையத்தில் 27 9 2025 சனிக்கிழமை அன்று56 ஆவது ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை மஹா உற்சவம் மற்றும் நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 28 9 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை மஹா பெரியவா மகிமை, 29 9 2025 அன்று திங்கட்கிழமை பக்த பிரகலாத சரிதம் நடைபெறும் என்றும் 30 9 2025 செவ்வாய்க்கிழமை அன்று சீனிவாச கல்யாணம் உபன்யாசம் நடைபெறும் என்றும் அதனைத் தொடர்ந்து 1 10 2025 பக்தி பாடல்கள் நடைபெறும் என்றும் 2 10 2025 அன்று நாம சங்கீர்த்தனம் நடைபெறும் என்றும் 3 10 2025 அன்று புரட்டாசி சிரவணம் திருமஞ்சனம் நடைபெறும் என்று தெரிவித்தனர் இந்த நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க வேண்டும் என ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் தலைவர் தம்மினேனி பாபு அவர்கள் தெரிவித்தார். மேலும் அக்டோபர் 4 10 2025 சனிக்கிழமை அன்று மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெறும் அதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணி அளவில் கருட சேவா புறப்பாடு நடைபெறும் தொடர்ந்து 5 10 2025 அன்று சென்னை பெரம்பூர் கல்கி ரங்கநாதன் மாண்ட் போர்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 8:30 மணி முதல் 12 45 வரை திருக்கல்யாண வைப உற்சவம் நடைபெறும் என்றும் இந்த நிகழ்வில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு பெருமாளை தரிசிக்க வேண்டும் என தெரிவித்தனர்.


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai