சென்னைபத்திரிகையாளர் மன்றத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்.A.ஹென்றி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போதுஅவர் கூறுகையில் கூட்டமைப்பின் 8வது தேசிய மற்றும் மாநிலச் செயற்குழு பொறுப்பாளருக்கான தேர்தல் 30.நவம்பர் அன்று நடைபெற்றது.
இதில் தேசியகுழுவிற்கு பொதுச் செயலாளராக ஜெயச்சந்திரன், செயல் தலைவராக கோவை செந்தில்குமார், நிர்வாக செயலாளராக அரியலூர் கிருஷ்ணகுமார், வளர்ச்சி செயலாளராக தி. மலை நரேஷ்சந்த்,பொருளாளராக சிகரம் சந்திரசேகர் மற்றும்மற்றும்நிர்வாகிகள்தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்கள்2026மற்றும்2027
2ஆண்டுகள்பதவிவகிப்பார்கள் என்று கூறினார்.
அதனைதொடர்ந்துசென்னை மற்றும் வளர்ந்து வரும்நகரங்களில்விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் பற்றி சரியான முறையில்தகவல்தெரிவிக்கவில்லை,இதுஎங்களைப் போன்ற தொழில் செய்பவர்களுக்குபாதிப்பாக உள்ளது,அதனை உடனடியாக சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.
எங்கள் தொழிலில் பத்திர பதிவுத்துறையில் அரசின் வழிகாட்டுதலை மீறிஅனைத்துபிரிவுகளிலும் அரசு கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் செலுத்துமாறு மற்றும் லஞ்சம்அதிகரித்துள்ளது.
இந்தசெயல்மேல்மட்டத்
தில் இருந்து கீழ் வரை செயலில் உள்ளது.இது தொடர்பாக விளக்கம் கேட்டால் அனைத்திற்கும் பத்திர பதிவுத்துறை அமைச்சரேயே காரணம் என்று கூறுகிறார்கள்.
நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று செயல் நடைபெறுகிறது, எனவே இதனை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என்றால்அதற்குஎந்தவழிஎன்றுதெரியவில்லை.இதுதொடர்பாகமுதல்வருக்குபுகார்அளித்துள்ளோம் எனக் கூறினார்.
இந்தசெய்தியாளர்கள் சந்திப்பின்போது புதிய நிர்வாகிகள்உடன் இருந்தனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?