சென்னை: ஏப்ரல் : எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சட்டப் பள்ளியில், இணைத்துணைவேந்தராக பேராசிரியர் ஒய்.எஸ்.ஆர். மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். அரசு அதிகாரியாக இருந்து கல்வியாளராக மாறிய இவர், உயர்கல்வி, மனித உரிமைகள், ஊடகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்வாய்ந்தவராக இருக்கிறார்.
இவர் 2020-24 காலகட்டத்தில், பெங்களூருவில் உள்ள ஆர்.வி. பல்கலைக்கழக நிறுவனத்தின் துணைவேந்தராகவும், சட்டப் பள்ளியின் நிறுவன டீனாகவும் பணியாற்றினார். இவரது தலைமையில் அப்பல்கலைக்கழகம் வேகமான முன்னேற்றம்கண்டது. பின்னர் 2024-25 வரை அஸ்ஸாம் ராயல் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்பணியாற்றியுள்ளார்.
இவர் 2020-24 காலகட்டத்தில், பெங்களூருவில் உள்ள ஆர்.வி. பல்கலைக்கழக நிறுவனத்தின் துணைவேந்தராகவும், சட்டப் பள்ளியின் நிறுவன டீனாகவும் பணியாற்றினார். இவரது தலைமையில் அப்பல்கலைக்கழகம் வேகமான முன்னேற்றம்கண்டது. பின்னர் 2024-25 வரை அஸ்ஸாம் ராயல் குளோபல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும்பணியாற்றியுள்ளார்.
சிறந்த நிறுவனங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட டாக்டர் மூர்த்தி, 2009 முதல் 2020 வரை ஓ.பி. ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் (JGU) தலைமைக்குழுவில் ஒரு நபராக, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். அந்தப் பல்கலைக்கழகம் சர்வதேச தரவரிசையில் முன்னேறவும், ‘சிறப்பு கல்வி நிறுவனம்’ (Institution of Eminence) என்ற தகுதியைப் பெறவும் இவர் பெரிதும் உதவினார். பேராசிரியர், பதிவாளர் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் பல்கலைக்கழகத்தில்இவர் வகித்துள்ளார்.
1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் இதர அரசுப் பணிகளுக்கான பிரிவைச் சேர்ந்த அதிகாரியான டாக்டர் மூர்த்தி, நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் செயலகம் மற்றும் அமைச்சரவைச் செயலகத்தில் பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்துள்ளார். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் இயக்குநராக ஆராய்ச்சி உட்பட பல்வேறு பதவிகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார். அப்போது எம்.என். வெங்கடாசலையா மற்றும் ஜே.எஸ். வர்மா போன்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதிகள் ஐந்து பேருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங், ராஜ்நாத் சிங் மற்றும் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்களுக்குப் செய்தித் தொடர்பாளராகவும் செயல்புரிந்துள்ளார்.
இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களையும், லண்டன் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் துறையில் முதுகலை பட்டத்தையும், சென்னை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி (Ph.D.) பட்டத்தையும் பெற்றுள்ளார். முதுகலை படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த இவர், மதிப்புமிக்க ‘பிரிட்டிஷ் செவெனிங்’ பெல்லோஷிப் விருதையும் பெற்றுள்ளார். டெல்லி IIMC-ல் ஊடகத் தொடர்பியல் பயிற்சியையும், புனே FTII-ல் திரைப்பட ரசனை மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு பயிற்சியையும் பெற்றுள்ளார்.
டாக்டர் மூர்த்தி SWAYAM திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், பிரிட்டிஷ் அறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். மனித உரிமைகளுக்கான இவரது சிறந்த பங்களிப்பிற்காக கேப்பிட்டல் பவுண்டேஷனின் ‘நீதிபதி ஜே.எஸ். வர்மா தேசிய விருது’, இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் (PRCI) வழங்கிய கல்வியில் சிறந்தவிளங்கியமைக்கான ‘சாணக்யா தேசிய விருது 2023’, பெங்களூரு மேலாண்மை சங்கத்தின் (BMA) ‘கல்விச் சிறப்பு விருது 2023’ மற்றும் பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இவர் ஹரித்வாரில் உள்ள தேவ் கலாச்சாரம் விஸ்வ வித்யாலயாவின் மேலாண்மை வாரிய உறுப்பினராகப் பணியாற்றுகிறார். இந்திய சர்வதேச சட்ட சங்கத்தின் (ISIL) வாழ்நாள் உறுப்பினராகவும், தற்போது அதன் செயற்குழு உறுப்பினராகவும் பேராசிரியர் மூர்த்தி பணியாற்றுகிறார்.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமி, கேரள அரசு, IGNOU, JNU, டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் சில முக்கிய மனித உரிமை அமைப்புகள் இவரிடம் ஆலோசனை பெறுகின்றன. தேசிய மற்றும் மாநில மனித உரிமை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் அகில இந்திய கூட்டமைப்பின் (AINNI) ஆலோசகராக இவர் உள்ளார். மேலும், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி அமைப்பால் உருவாக்கப்பட்ட சித்திரவதைக்கு எதிரான சிவில் சமூகக் கூட்டணியின் முக்கியக் குழுவில் இவர் ஒரு உறுப்பினராகவும் உள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம், மெக்கில் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல உலகளாவிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் மூர்த்தி பயிற்சி பெற்றுள்ளார். மேலும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2019-ல் ஹரியானா மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.


More Stories
இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரி : ஆசிரியர் தினம் – முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா
SRM School of Law Adds 35 New Faculty Members in a Major Push towards Internationalisation
SRM Institute of Science and Technology Organized International Conference on Human Capital Management