சென்னை எழும்பூர் ஏஜே மருத்துவமனை அரங்கில் செய்தியாளரை சந்தித்த வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டர்கள் நல சங்கத்தின் தலைவர் டாக்டர் அமீர்ஜஹான் கூறியது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மலேரியா டெங்கு காய்ச்சல் நோய்கள் பரவாமல் இருக்க தாம் வசிக்கும் இடங்களை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருவதாகவும் மருத்துவத்துறையில் உலக அளவில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதாகவும் கூறினார் பொதுமக்களாகிய நாம் அனைவரும் தாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் அதேபோல் தூய்மையான குடிநீரை அருந்த வேண்டும் இவை அனைத்தும் கடைபிடித்தால் மட்டும் போதும் எந்த நோய் நொடியும் வராது என தெரிவித்தார்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?